கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள பொலிஸாரின் எண்ணிக்கை நேற்று 183 ஆக அதிகரித்துள்ள நிலையில் மூன்று அதிரடிப்படையின் முகாம்கள் நேற்று மூடப்பட்டன.
களுபோவில, ராஜகிரிய, களனி ஆகிய பகுதிகளிலுள்ள முகாம்களே நேற்று மூடப்பட்டன.
இந்த முகாம்களில் உள்ள படையினர் பலருக்கு கொரோனா தொற்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே அந்த முகாம்கள் மூடப்பட்டன.